Thursday, December 29, 2011

வீடுகளில் ஆண்டுகள்தான் படுத்துள்ளது வீடியோவுடன்

இது 'யாழ்முஸ்லிம்மண்' வலைத்தளச் செய்தி:  புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகனான முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் இன்றைக்கு 300 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரம் முஸ்லிம் வர்த்தகர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது என்பது யாழ் பற்றிய வரலாறு ஆனால் இன்று நிலைமை படு பயங்கரமாக உள்ளது. யாழ்ப்பாண சோனகர் தெருவுக்குள் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்புவதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது , எமது காணிகள் பல பறிபோய் விட்டது இன்னும் பல காணிகள் விற்பனைக்கு காத்திருக்கிறது .

யாழ்ப்பாணத்தின் முஸ்லிம்கள் சில நூறு குடும்பங்கள்தான் வாழ்கிறது அதிலும் மிகவும் வறுமையான குடும்பங்கள்தான் மிகவும் அதிகம் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண நகரில்தான் வாழ்கிறார்கள் ஆனால் யாழ்பாணத்தில் மட்டுமல்ல யாழ் புறநகர் பகுதிகளான நெய்னா தீவு , சுன்னாகம், பருத்தித்துறை ,மண்கும்பான் போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் அதிகமாக வர்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள், வாழ்ந்துள்ளார்கள் அதற்கு அதிகமான சான்றுகள் உள்ளது , அந்த சான்றுகளில் ஒன்றாக அங்குள்ள பள்ளிவாயல்கள் உள்ளன அவற்றில்  , நெய்னா தீவு , பருத்தித்துறை , பள்ளிகளின் பதிவை எமது யாழவன் தருகிறார் பாருங்கள்.

செய்யப்படவேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது நாம் தொடர்ந்து சொல்வோம் செல்வோம் ....!!! நீங்களும் பயணிக்க தயாரா ??, யாழ்பாணத்தில் எமது இருப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எமது பயணம் இன்ஷாஅல்லாஹ் நிற்காது .


No comments:

Post a Comment