Friday, December 30, 2011

யாழ் வரும் அப்துல்கலாமை யாழ் . சம்மேளனம் பயன்படுத்துமா ??

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் இறுதியில் இலங்கை வரவுள்ளார் . யாழ் , கிளிநொச்சி சம்மேளனம்அவரை சந்தித்து யாழ் சோனகர் தெருவை காண்பித்து முஸ்லிம் நிலைமைகளை விளக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் அப்துல்கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவாராம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விட யங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது . யாழ் முஸ்லிம் பிரதிநிதிகள் யாழ் முஸ்லிம் பகுதிகளை கூட்டி சென்று அவருக்கு காட்டவேண்டும் இந்தியாவில் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகளை அறியாத ஒருவர்தான் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை பல தடைவைகள் பேசியுள்ளார் என்று விமர்சனங்கள் உண்டு இது தொடர்பாக யாழ் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் குறிப்பாக யாழ் , கிளிநொச்சி சம்மேளனம்அவரை சந்தித்து யாழ் சோனகர் தெருவை காண்பித்து முஸ்லிம் நிலைமைகளை விளக்க
நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment